Friday, June 12, 2020

ஆனைச்சாத்தான் குருவி



ஆனைச்சாத்தான்'

இரட்டைவால் குருவி. கரிச்சான் குருவி, ஆனைச்சாத்தான் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்தச் சிறிய பறவையிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில பண்புகள்.

கரிச்சான்தான் அந்த வேட்டை நாயகன். மின் கம்பங்கள், மாடுகள்மீது, கருநீல நிறத்தில் இரட்டை வாலுடன் பார்த்திருப்பீர்கள். கால்நடைகள் நடக்கும்போது, அதன் காலுக்குக் கீழேயுள்ள செடிகள் மிதிப்பட்டு, அதில் உள்ள பூச்சிகள் பறக்கும். அப்போது, கால்நடைகளின் முதுகில் உள்ள கரிச்சான், குட்டி விமானம்போல, பறந்து, பூச்சியைப் பிடித்துக்கொண்டு மீண்டும் கால்நடை முதுகில் அமர்ந்துகொள்ளும். தற்போது இதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கரிச்சானிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன.

 Drongo தன்னை விடப் பலத்திலும், உருவத்திலும் பெரிதான பருந்தைக் கூட, வெறித்தனமாக விரட்டும். விரட்டும்போது இது காட்டும் வேகம் மற்றும் மூர்க்கம் பருந்தைப் பதறி ஓட வைக்கும். இவனை, King Crow என அழைக்கிறார்கள்.

இனப்பெருக்க காலத்தில், இது தனது எல்லை பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும். எத்தனை பெரிய பறவையானாலும், அந்த எல்லைக்குள் வர முடியாது. இதைச் சில சிறிய பறவைகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. தங்கள் பாதுகாப்புக்காக, புறா, தவிட்டுக்குருவி உள்ளிட்ட சில பறவைகள், தங்கள் கூடுகளைக் கரிச்சான் கூட்டுக்கு அருகே அமைத்துத் தங்களைக் காத்துக்கொள்கின்றன.
நன்றி : விகடன்

No comments:

Post a Comment